THEEPAN Creation

Thursday, January 19, 2012

யாரோ அவள்......


யாரோ அவள்... யாரோ அவள் கண்ணிமை மறக்க வைத்தவள்
யாரோ அவள் என் சுவாசத்தின் கீதமானவள்
யாரோ அவள் வண்ணத்தின் நிறமானவள்
யாரோ அவள் வாசலில் கோலமானவள்
யாரோ அவள் வார்த்தைகளின் சொல்லானவள்
யாரோ அவள் கண்ணாடி பிம்பமானவள்
யாரோ அவள் நினைக்காமல் நினைவில் இருப்பவள்
யாரோ அவள் நிலவின் குளிரானவள்
யாரோ அவள் இன்னிசையின் சுரமானவள்
யாரோ அவள் சோலைகளின் பசுமையானவள்
யாரோ அவள் வாழ்கையின் வரமானவள்
யாரோ அவள் மலரின் மனமானவள்
யாரோ அவள் மாலைகளில் மலரானவள்
யாரோ அவள் விடியலின் வெளிச்சமானவள்
யாரோ அவள் சிறகுகளுக்கு பறக்க கற்றுத்தந்தவள்
அவளே என் சுகமான நினைவானவள்..............

No comments:

Post a Comment