THEEPAN Creation

Monday, January 23, 2012

உண்மையாக நேசிக்க முடியாது....


உன்னை
கோப படுத்தும்
இதயத்தை
வெறுத்து விடாதே,
அவர்களை
விட வேறு
யாராலும் உன்னை
உண்மையாக
நேசிக்க முடியாது....

உண்மையான காதல்...


நினைவில் வைத்து
கனவில் காண்பது
அல்ல காதல்...
மனதில் புதைத்து
மரணம் வரை
தொடர்வது தான்
உண்மையான காதல்...

என் மூச்சிருக்கும் வரை...


உன் விரல் நகம்
போல நான்..!
நீ வெட்டி எறிந்தாலும்
உன் மீது நான்
வைத்துள்ள "அன்பு"
வளர்ந்து கொண்டே தான்
இருக்கும்...
என் மூச்சி
இருக்கும் வரை...

பிடிக்கவில்லை....


அவளை
காதலிக்கும்
போது
எவளையுமே
பிடிக்கவில்லை..!
ஆனால்...
அவள் போன
பிறகு
காதலிக்கவே
பிடிக்கவில்லை..!

உன்னை நேசிப்பது....


உயிருள்ளவரை
என்னால்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
காற்றை சுவாசிப்பது..!

உயிர்போனபின்பும்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
உன்னை நேசிப்பது....!!!

தனிமையின் வலி ....


உன்னை காணும் முன்னரும்
நான் தனிமையில் தான் இருந்தேன்
அப்போது தெரியவில்லை தனிமையின் வலி
இப்போது உணர்கிறேன் தனிமையின் வேதனையை
நீ என்னை பிரிந்து சென்ற பின்பு .........

வாழ்கிறேன்....


உன்னை நினைத்து கொண்டு
வாழவில்லை நான்...
உன்னை நினைப்பதால்
தான் வாழ்கிறேன்.........

நீ தான் ...


உன் இதயத்தை கேட்டுபார்.
ஒவ்வொரு துடிப்புக்கும்
ஒரு அர்த்தம் சொல்லும்
என் இதயத்தை கேட்டுபார்
துடிப்பின் அர்த்தமே
நீ தான் என்று சொல்லும்!

Thursday, January 19, 2012

காதல்.....


கனவுகளில் மலர்வதில்லை
காதல்
இதயத்தில் மலர்வதே காதல்
இதயம் இறக்கும் வரை
உயிரானவளே
உன்னை நினைத்து துடிக்குமடி
என் இதயம்....

உயிரை ....


உன்னை என் கருவாய்
சுமந்திருந்தேன் -நீயோ
குழந்தை போல் பிரிந்து விட்டாய்
என் உயிரை கிழித்து.....!

எதிர்' பார்கிறேன்....


உன்னை 'எதிரில்' பார்த்த நாட்களை விட,
'எதிர்' பார்த்த நாட்களே அதிகம்.
இன்னும் உன்னை நான் 'எதிர்' பார்கிறேன்,
'எதிரில்' பார்க்க.....

உயிர் மட்டும் உனக்காக....


உள்ளத்தால் அழுதாலும்,
உதடுகளால் சிரிக்கிறேன்,
அழுவதும் உனக்காக,
சிரிப்பதும் உன்னக்க,
நீ மட்டும் எனக்காக,
என்ன உயிர் மட்டும் உனக்காக....

இறப்பேன்....


நான் உயிரோடு
உள்ளவரை
உன் உறவோடு
வாழும் வரை
உன்னை சுவாசித்து கொண்டே.
இருப்பேன்
இல்லை நேசித்து கொண்டே.
இறப்பேன்.........

என் விழிகள்....


விழிகள் மூடும் சில நிமிடங்கள்
மட்டும் நான் உன்னை நினைப்பதில்லை.
என் விழிகள் நிரந்தரமாய் மூடும் வரை
நினைத்து கொண்டிருப்பேன் உன்னை…

கல்லறையில்!.....


காலம் முழுதும் சேர்ந்திருப்பேன் ,
உன் நிழலாக .
நீ இமை மூடும் வரை காத்திருப்பேன் ,
உன் கண்களாக.
நீ சுவாசிக்கும் காற்றில் கலந்திருப்பேன்,
ஒரு அணுவாக.
நீ உறங்கினாலும் விழித்திருப்பேன்,
உன் கனவாக .
நீ என்னை நேசிக்கும் வரை நின்றிபேன்,
உன் இதயமாக.
உன் வாசத்துடன் இணைந்திருப்பேன் ,
ஒரு மலராக,
நீ என்னை வெறுத்தாலும் வாழ்ந்திருப்பேன்,
ஒரு பிணமாய் கல்லறையில்!

என் காதல் .....


என் உள்ளே
நீ இருப்பதலா?
என் உருவம்
உனக்கு
தெரியவில்லை!
என் காதல்
உனக்கு புரியவில்லை.

இதயத்திலும் ஈரம் .....


உன் கண்களில்
இருந்த ஈரம்
உன் இதயத்திலும்
இருந்திருந்தால்..........
நான் தொலைந்திருக்க
மாட்டேன் அல்லவா?

சொல்லிவிடு ....


இன்று காதலித்து
நாளை தொலைவாய்
என்றால்.
முன்பே சொல்லிவிடு
நான் தொலைந்தே
போய்விடுக்கிறேன்........

மறந்து விட்டேன்....


உன்னை
நினைக்க தொடங்கிய
அன்றே என்னை மறந்து விட்டேன்.

அதனால் தான்
என் காதலை உன்னிடம்
சொல்லக்கூட மறந்து போனேன்......

இறப்பதில்லை.


உடன்
கண்ட காதல்
என்றும்
நிலைப்பதில்லை.

உயிர்
கொண்ட காதல்
என்றும்
இறப்பதில்லை.

காதல் பிரிவது ....


காதல்
பிரிவது சுலபம்
புரிவது கடினம்
புரியாமல்
பிரிவது ரணம்
புரிந்தே
பிரிவது மரணம்.........

காதல் ....


நீ என்னை நேசிக்கவே..........
யோசிக்கிறாய்?
நான் உன்னை சுவாசிக்க.........
யாசிக்கிறேன்?

அன்பே.....


என்னை நினைவுபடுத்தும் ஒரு பொருளை
உனக்கு பரிசளிக்க நினைத்தேன்....
உன்னையே தந்தாலும்
அது சாத்தியமில்லை அன்பே..........

நீ பிரிந்தால் .....


போகாதே போகாதே!
நீ இருந்தால் நான் இருப்பேன்!
போகாதே போகாதே!
நீ பிரிந்தால் நான் இறப்பேன்!
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கணவாய் என்னை மூடுதடி!
யாரென்று நீயும் எனை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி!
கல்லரையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து
உன்தன் முகம் பார்பேனடி!.......

என்ன கொடுக்க போகிறாய்?.....


நிலாவிற்கு ஒளி கொடுத்தவள் நீ
வானவில்லுக்கு நிறம் கொடுத்தவள் நீ
மலருக்கு மணம் கொடுத்தவள் நீ
தென்றலுக்கு ஸ்பரிசம் கொடுத்தவள் நீ

கரும்புக்கு சுவை கொடுத்தவள் நீ
இசைக்கு ராகம் கொடுத்தவள் நீ
குழந்தைக்கு அழகு கொடுத்தவள் நீ
பெண்மைக்கு புன்னகை கொடுத்தவள் நீ
----- எனக்கு என்ன கொடுக்க போகிறாய்?

மறக்காதே......


இரவின் மடியில்
நீ உறங்க
உன்
நினைவின் மடியில்
நான் இருப்பேன்
தூங்கிவிட மறுக்காதே.........
என்னை தூக்கத்திலும்
மறக்காதே..........

யாரோ அவள்......


யாரோ அவள்... யாரோ அவள் கண்ணிமை மறக்க வைத்தவள்
யாரோ அவள் என் சுவாசத்தின் கீதமானவள்
யாரோ அவள் வண்ணத்தின் நிறமானவள்
யாரோ அவள் வாசலில் கோலமானவள்
யாரோ அவள் வார்த்தைகளின் சொல்லானவள்
யாரோ அவள் கண்ணாடி பிம்பமானவள்
யாரோ அவள் நினைக்காமல் நினைவில் இருப்பவள்
யாரோ அவள் நிலவின் குளிரானவள்
யாரோ அவள் இன்னிசையின் சுரமானவள்
யாரோ அவள் சோலைகளின் பசுமையானவள்
யாரோ அவள் வாழ்கையின் வரமானவள்
யாரோ அவள் மலரின் மனமானவள்
யாரோ அவள் மாலைகளில் மலரானவள்
யாரோ அவள் விடியலின் வெளிச்சமானவள்
யாரோ அவள் சிறகுகளுக்கு பறக்க கற்றுத்தந்தவள்
அவளே என் சுகமான நினைவானவள்..............

உயிர் வாழ .....


உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன்
ஏன் என்றால்
நீ துடித்து நான் உயிர் வாழ விரும்ப வில்லை...........

காதல்.......


வெறுத்து கொண்டே பிடிகிறது காதல்
சிரித்து கொண்டே அழ வைக்கிறது காதல்
மௌனமாய் இருந்து நிறைய
என்னை பேச வைக்கிறது காதல்
வார்த்தையை தெரியாத என்னை
கவியாக்கியதும் காதல்
நான் கேட்காமலே கல்லறை வரை
கூட்டி செல்கிறது காதல்................

இறப்பதற்குள் ஒரு முறை,....


இறப்பதற்குள் ஒரு முறை,
உன் சட்டை வாசம் நூகர வேண்டும்
உன் கட்டை விரலில் என் பற்களை பதிக்க வேண்டும்
உன் நிழலாவது என் தனிமையை உணர வேண்டும்
உன் கனவாது என் வருகைக்கு வழி விட வேண்டும்
உயிரே......................
உன் இதயம் ஒரு முறையாவது என் கண்ணீரை உணர வேண்டும்