THEEPAN Creation

Monday, October 17, 2011

எப்போது நீ வருவாய்

தனிமையே வரமாய்
தவிப்பே வாழ்க்கையாய்
இனிமை இழந்து
இதயம் வெறுத்து...
நித்தம் உன் நினைவில்
நித்திரை தொலைத்து
கனவே காதலாய் - அந்த
காதலே கானலாய்...
கானல் நீரில்
உன் பிம்பம் அறிந்து
என் கண்ணீரில்
உன் உருவம் மறைந்து...
விழி சிந்தும்
துளி நீரும்
உனக்காகத் தான்,
உன் வருகையை
எதிர்பார்த்துத் தான்...
விடை தான் தெரியவில்லை.
எப்போது நீ வருவாய் என..?

No comments:

Post a Comment