THEEPAN Creation

Sunday, October 16, 2011

உன்னை ...

உன்னை பார்த்த நாள் முதல்,
தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
கவிதை எழுதுகிறேன்!
உன்னை ரசித்த நாள் முதல்,
உன் உருவம் மனங்கண்டு
தனியே பேசுகிறேன்!
உன்னில் மயங்கிய நாள் முதல்,
விளங்காத ஓர் உணர்வுக்கு
விளக்கம் தேடுகிறேன்!
உன்னை காதலித்த நாள் முதல்,
ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
சுமை தெரியாமல்!

No comments:

Post a Comment