THEEPAN Creation

Sunday, October 23, 2011

கண்ணீர் ....













கண்கள் கூட கவிதை பேசும் ,
உன்னை பார்க்கையில் . !
கவிதை கூட கண்ணீர் வடிக்கும் ,
உன்னை பிரிகையில் !

நினைவுகள் .....











நாட்கள் என்னை
கடந்து சென்றாலும்
நம் நட்பின்
நினைவுகள்
பிரிந்து
செல்வதில்லை
என்றும்

கவிதை.....















கவிதையும் வெறும் காகிதமானது
அவளை கண்டபோது "

கவிதையும் ஒரு காவியமானது
அவள் என்னுள் கரைந்தபோது"

கவிதையும் ஒளிரும் ஓவியமானது
அவள் என் கண்ணில் மறைந்தபோது......

ஆசைதான்...

















தவறு என்று தெரிந்தும்
தவிர்க்க முடியாமல்
தவிக்கும் இதயத்தின்
ஆசைதான் காதல் !

என் இதயம்....













நீ என்னை வெறுக்கும் போதும் .....
உன்னை சுற்றியே வருகிறது
என் இதயம்....
இலைகள் வெறுக்கும் போதும்
உரசுகிற காற்றாக......

தாங்க முடியாது....









வழிகளை சுமக்கும் இதயத்திற்கு
கண்ணீர் சிந்த தெரியாது
கண்ணீர் சிந்தும் விழிகளுக்கோ
வலிகள் தாங்க முடியாது....

உண்மை ...














நீ என்னருகில் இல்லை என்பது
எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை நீ
எனக்குள் இருக்கிறாய் என்பது...

காதல் என்பது ...













காதல் என்பது 
கடற்கரை மணலில்
காலத்தை வீணடிப்பதில்லை,
காவியம்!....
ஆம், நான் காதலிககாதவரை!

கண்ணாடி....



















ஒவ்வொரு முறையும் நான் கண்ணடித்தான்
உன்னால் நொறுங்கி போய்விடலாம்
உந்தன் கண்ணீரில் கண்ணாடியாய் நான் விழுந்துவிட்டால்
உடையாமல் இருப்பேனோ ஒருவேளை ?

Wednesday, October 19, 2011

துடிப்பது....

என் விழிகள் துடிப்பது உன்னை காண
உதடுகள் துடிப்பது உன்னோடு பேச
இதயம் துடிப்பது உன்னை தாங்க
இளமை துடிப்பது உன்னோடு வாழ
ஆனால் இன்று என்னால் எதுவும்
முடியவில்லை உன்னை பிரிந்ததால்.......!!!

நீ....

நீ என்னை நேசிக்கவே
யோசிக்கிறாய்
நான் உன்னை சுவசிக்கவே
யாசிக்கிறேன்........

எப்படி

எனக்குள் இருக்கும்
உன்னையே உன்னால்
புரிந்து கொள்ள
முடியாத போது!

உனக்குள் இருக்கும்
என்னை எப்படியடி
புரிந்து கொள்வாய்..........

குழந்தையும் காதலும் ...











ஏனென்றே தெரியாமல் சிரிப்பதும்
புரியாமல் அழுவதும்
அடிக்கடி தவிக்க வைப்பதும்,
விலை பேச முடியாததும்........

ஆம்
குழந்தையும் காதலும் ஒன்றுதான்!!!!

Monday, October 17, 2011

கிடைக்க மாட்டாய்



என்னில் கலந்து, கரைந்து,
மறைந்து போன உன்னை
நீயே தேடினாலும்
கிடைக்க மாட்டாய்.....?!!

வலிக்கிறது

என்னவளே

நீ செல்லமாய் கோபித்து

அடிகையிலும் கில்லுகையிலும்

சுகமாய் வலிக்கிறது

உன் அழகான காதலால்

எங்கே கற்று கொண்டாய்

அன்பே

எங்கே கற்று கொண்டாய்

காதலை கண்ணால் கற்பிக்க

கவிதையாய் சொல்கின்றாய்

கண்ணசைவில் காதலை

கசங்கிய காகிதமாய்

காகிதம் ஏங்குதடி

எழுத்தில் எழுதாமல் காகிதத்தில் சொல்லாமல்

கண்களால் சொல்லியதால்

காகிதம் அழுகிறதே

இறைவன்

இறைவன் படைப்பில் சாதனை

உன்னை படைத்தது

அதே இறைவன் படைப்பில் வேதனை

உன்னை நினைத்தே என்னை

உருக வைத்தது

ஒருநொடி.......

ஒருநொடி உன்மடியில்

உறங்கினால் போதும்

காதலில் தாய் நீ என

உன்னை என்மனம் நாடும்

இருக்கிறாய் காதலில்

என்றுமே எனகென நீ

பகலை இரவாய் மாற்றவா.......

என்னவளே

பகல் கனவுகள் ஒருபோதும்

பலிக்காது என்பார்கள்

நீயும் நானும் ஒன்று சேர்வதாய்

வரும் நிறைய பகல் கனவுகளை

என்ன செய்ய சொல்
என்னவளே

பகல் கனவுகள் ஒருபோதும்

பலிக்காது என்பார்கள்

நீயும் நானும் ஒன்று சேர்வதாய்

வரும் நிறைய பகல் கனவுகளை

என்ன செய்ய சொல்

பகலை இரவாய் மாற்றவா
பகலை இரவாய் மாற்றவா......

அவள்..

அவள் விரல் தொடவில்லை

அணைத்து உறவாட வில்லை

முத்தங்கள் காற்றில் விட வில்லை

கனவில் கட்டி புரண்டதில்லை

விழிகளால் எல்லாம் செய்து

காதலில் தொடாமல் என்னை

தொட்டு சென்றாள்

மடிந்தால்...

உன்னைப் பார்த்தபோதே
முடிவு செய்துவிட்டேன்
நான் மடிந்தால்............அது
உன் மடியில்தான்

மறுக்கிறது ...

என்னைப் பிரிந்து நீ எங்கோ வாழ்கிறாய்
இருந்தும் நீ பிரிந்ததை ஞாபகப்படுத்த
மறுக்கிறது என் காதலின் நினைவு........

மௌனம்...

நீ
எனக்காக சொல்லும்
கவிதைகளை விட…..

உன்
மௌனம் சொல்லும்
கவிதைகளே
எனக்குப் பிடிக்கிறது.

ஏன் தெரியுமா…?

உன் மௌனத்தின் அர்த்தம்தான்
இன்னும் எனக்குப் புரியவில்லை.

யார் அழகு

என் பல நாள்
ஆசைகளில் ஒன்று
நிலவின் அருகில்
உன்னை வைத்து
யார் அழகு என்பதை
பார்க்க வேண்டுமென்று..!
ஆனால்
உன்னை வைத்து விட்டு
நிலவை எங்கே போய்
நான் தேட..!

கடிகாரம்..

எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன
சந்திக்கும் போதெல்லாம்
கட்டி தழுவிக் கொள்ளும்
கடிகார முட்களை
போல
"நன் காதல்"

வெட்கம்

மழலை போல
சிரிக்கிறேன்
உந்தன் சிரிப்பை
பார்கையில்...
பெண்கள் போல
வெட்கம் கொள்கிறேன்
உந்தன் முகத்தை
பார்கையில்

எப்போது நீ வருவாய்

தனிமையே வரமாய்
தவிப்பே வாழ்க்கையாய்
இனிமை இழந்து
இதயம் வெறுத்து...
நித்தம் உன் நினைவில்
நித்திரை தொலைத்து
கனவே காதலாய் - அந்த
காதலே கானலாய்...
கானல் நீரில்
உன் பிம்பம் அறிந்து
என் கண்ணீரில்
உன் உருவம் மறைந்து...
விழி சிந்தும்
துளி நீரும்
உனக்காகத் தான்,
உன் வருகையை
எதிர்பார்த்துத் தான்...
விடை தான் தெரியவில்லை.
எப்போது நீ வருவாய் என..?

உறங்க நினைத்தேன்

உறங்க நினைத்தேன்

முடியவில்லை..........

பின்

புரிந்தது......

என்

இமைகளுக்குள்

நீ...........

இருப்பதால்

அவை

மூடமறுக்கின்றன

என்று.........

Sunday, October 16, 2011

நினைவுகள்..

பெண்ணே...
உன்னுடன்
எந்நேரமும் இருபதாகச்
சொல்லி
பெருமைப்பட்டுக் கொள்கிறது
உன்னுடனான
என் "நினைவுகள்"

சக்தி...

காதலும் அழகுதான்
வானவில்l போல. . . . .
வானவில் வளர தேவை
மலையும்,சூரியனும் . . . . .
என் காதல் வளர
உன் அழகும் அமைதியும் போதும். . . . .
என் கவிதைகள் வளர
நீயும்,உன் கவர்சிக் கண்கள் மட்டும போதும். . . . .
கண்ணால் கொள்ளும் சக்தியை
உனக்கு மட்டும கொடுத்தாரா
கடவுள் எமனை கொன்றுவிட்டு . . 

என் கண்மணி...

விடியலின் முதல் வெளிச்சம்
சூரியன். . . ..
கவிதையன் சஊரியானும் கற்பனை
காதல். . . . .
காதலின் முதல் தொடக்கம்
பார்வை. . . . .
என் இதயத்தின் முதல் காதல்
அவள் தான். . . . .
என் கண்மணி. . .!!!

உன்னை ...

உன்னை பார்த்த நாள் முதல்,
தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
கவிதை எழுதுகிறேன்!
உன்னை ரசித்த நாள் முதல்,
உன் உருவம் மனங்கண்டு
தனியே பேசுகிறேன்!
உன்னில் மயங்கிய நாள் முதல்,
விளங்காத ஓர் உணர்வுக்கு
விளக்கம் தேடுகிறேன்!
உன்னை காதலித்த நாள் முதல்,
ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
சுமை தெரியாமல்!

ஆசை...


 

எனக்கு இரண்டே ஆசைகள்தான், ஒன்று

உன்னை காதலித்துக்கொண்டே இருப்பது, இரண்டு

உன்னை காதலித்துக்கொண்டே இறப்பது........

கவிதை..

அவளுக்காக
கவிதை எழுதினேன்
"அன்று"...

அவளால்
கவிதை எழுதுகிறேன்
"இன்று"...

காயங்கள்..

கவிதைகள் பிடித்தது
கற்பனைகள் பிடித்தது
காதலித்தேன்
காயங்கள் கூட
பிடித்தது...

நினைவுகள்..

பெண்ணே...
உன்னுடன்
எந்நேரமும் இருபதாகச்
சொல்லி
பெருமைப்பட்டுக் கொள்கிறது
உன்னுடனான
என் "
"நினைவுகள்''''

தண்டனை..

கடல் வெள்ளம் போல் புகுந்து கனவுகளை படைத்தவளே
காந்த பார்வையால் கண்களுக்குள்  இனித்தவளே
தவறு நான் செய்யவில்லை தண்டனை நீ தருகிறாய்.....

அழகு ..

உன்னை
பார்த்த போது
நீ அழகாய்
தோன்றவில்லை

உன்னை
பார்த்த பின்பு 
வேறெதுவும்
அழகாய்
தோன்றவில்லை

பிடிக்கும்

உனக்கு அருவி பிடிக்கும்
என்பதற்காக
ஏன் அதை எப்பொழுதும்
என் கண்களிலேயே
காண விருப்பப்டுகிறாய்?

கண்ணீர்த்துளிகள்.

அன்பே! 

நீ எனைவிட்டு 

பிரிந்த சென்ற பின்பு 

நான் சிந்தும் கண்ணீர்த்துளிகளும் 

எனை பார்த்து சொல்கின்றது...... 

சிந்தும் கண்ணீர்த்துளிகளும் 

உனக்காகத்தான் என்று.......

மூச்சுக்காற்று....

விலகி விலகி சென்றாலும் 
விரட்டி விரட்டி அடிக்கும் 
உன் நினைவுகள். 
தூங்கும் போதும் 
என்னை தட்டி எழுப்பி 
செல்லுதே.. 
உன்னை பிரிந்து நான் 
தூரத்தில் இருந்தாலும். 
பிரியமான உன் 
மூச்சுக்காற்று என்னை 
சுற்றி சுற்றி வந்து 
சத்தம் இன்றி முத்தம் தந்து 
என்னை கொல்லுதே.

Saturday, October 15, 2011

காத்துக் கொண்டு இருக்கிறேன்....

கார்த்திருக்க சொன்னால் 
காதலி... 
கார்த்துகொண்டு தான் 
இருக்கிறேன் தூக்கமில்லாமல் 
அவள் பதில்காக...?

பிடிக்கும்..

என்னை பார்த்த ரசித்த...... 
உன் கண்கள் பிடிக்கும். 

என்னை முத்தம் செய்த......... 
உன் உதடுகள் பிடிக்கும். 

என்னை இறுக்கமாய் அணைத்த...... 
உன் கரங்கள் பிடிக்கும். 

என்னுடன் நடந்து வந்த.... 
உன் பாதங்கள் பிடிக்கும். 

என் மேல் அன்பை பொழிந்த.... 
உன்னை பிடிக்கும். 

ஆனால்......... 

நீ விட்டு சென்ற ..... 
உன் நினைவுகள். 

என் உதடு பிடிக்காது என்று சொன்னாலும் ..... 
என் இதயத்துக்கு... 

எனக்குள் இருக்கும் சின்ன மனசுக்கு

என் இதயம்......

என் உயிருள்ள 
காதலின் 
அணுக்களை 
நீ தின்று விட்டாய் 

ஒவ்வொரு 
அணுக்களிலும் 
உன் நினைவுகளை 
பாச்சி கொன்று விட்டாய் 

நான் உயிர் வாழ 
என் இதயம் துடித்ததில்லை 
உன்னை மட்டுமே 
நினைக்க 
துடித்ததடி...................

உண்மைக்காதல்....

அழுகை பிடிக்கும் எனக்கு
வேதனைகள் நீ தந்ததென்றால்
வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் ஆனதென்றால்
தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால்
எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால்
இதென்ன .......
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் தருவதென்றால் நிஜத்தில்

விழி ..

பெண்ணின் விழிகளை

மீன்கள் என வர்ணிப்பது ஏன் ?

அவை கண்ணீரிலே வாழ்வதாலா.
 

அன்பு .

உண்மையானஉணர்வுகள்இருந்தால்வார்த்தைகள்தேவை இல்லைநினைவுகள்கூட அன்பாக பேசும்..