THEEPAN Creation

Monday, January 23, 2012

உண்மையாக நேசிக்க முடியாது....


உன்னை
கோப படுத்தும்
இதயத்தை
வெறுத்து விடாதே,
அவர்களை
விட வேறு
யாராலும் உன்னை
உண்மையாக
நேசிக்க முடியாது....

உண்மையான காதல்...


நினைவில் வைத்து
கனவில் காண்பது
அல்ல காதல்...
மனதில் புதைத்து
மரணம் வரை
தொடர்வது தான்
உண்மையான காதல்...

என் மூச்சிருக்கும் வரை...


உன் விரல் நகம்
போல நான்..!
நீ வெட்டி எறிந்தாலும்
உன் மீது நான்
வைத்துள்ள "அன்பு"
வளர்ந்து கொண்டே தான்
இருக்கும்...
என் மூச்சி
இருக்கும் வரை...

பிடிக்கவில்லை....


அவளை
காதலிக்கும்
போது
எவளையுமே
பிடிக்கவில்லை..!
ஆனால்...
அவள் போன
பிறகு
காதலிக்கவே
பிடிக்கவில்லை..!

உன்னை நேசிப்பது....


உயிருள்ளவரை
என்னால்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
காற்றை சுவாசிப்பது..!

உயிர்போனபின்பும்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
உன்னை நேசிப்பது....!!!

தனிமையின் வலி ....


உன்னை காணும் முன்னரும்
நான் தனிமையில் தான் இருந்தேன்
அப்போது தெரியவில்லை தனிமையின் வலி
இப்போது உணர்கிறேன் தனிமையின் வேதனையை
நீ என்னை பிரிந்து சென்ற பின்பு .........

வாழ்கிறேன்....


உன்னை நினைத்து கொண்டு
வாழவில்லை நான்...
உன்னை நினைப்பதால்
தான் வாழ்கிறேன்.........